என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத சிவகங்கை மாவட்டம்
Byமாலை மலர்27 April 2020 7:21 AM GMT (Updated: 27 April 2020 7:21 AM GMT)
சிவகங்கை மாவட்டம் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
காரைக்குடி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியையும் முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. தள்ளுவண்டிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று காய்கறி வழங்கப்படுகிறது.
அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் சமூக கட்டுப்பாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறது.
இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள். பூரண குணமடைந்த அவர்களை கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் டாக்டர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணியையும் முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் எளிதில் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. தள்ளுவண்டிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று காய்கறி வழங்கப்படுகிறது.
அரசின் அதிரடி நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் சமூக கட்டுப்பாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த 20-ந்தேதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் இன்று வரை அதாவது 7 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நட வடிக்கைகளையும் மேற் கொண்டு வருகிறது.
இதற்கிடையே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள். பூரண குணமடைந்த அவர்களை கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் டாக்டர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X