என் மலர்
செய்திகள்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் குணமடைந்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 22 பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 39 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் என மொத்தம் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதில் 66 பேர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 11 பேர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினர்.
வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற 2 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 20 பேர் கடந்த 21-ந்தேதி குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களை தொடர்ந்து நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 17 பேர் குணமடைந்தனர். அவர்களை டீன் செல்வி சுகாதார துணை இயக்குனர் மணிவண்ணன் மற்றும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் பழங்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 பேர் குணமடைந்தனர். அவர்களை இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 79 பேரில் 57 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.






