என் மலர்
செய்திகள்

போலீசார் கண்காணிப்பு
கடலூரில் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
கடலூரில் பொதுமக்கள் வெளியில் செல்லும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகின்றனர். அவர்களும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி முக கவசம் அணியாமல் சென்றால் ரூ .100 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேற்று கடலூரில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் விதித்தனர். தடை உத்தரவை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தவிர மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகின்றனர். அவர்களும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி முக கவசம் அணியாமல் சென்றால் ரூ .100 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.
இதையடுத்து நேற்று கடலூரில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் விதித்தனர். தடை உத்தரவை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தவிர மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
Next Story






