என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் நடமாடும் ரத்த பரிசோதனை வாகனம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகளவு இல்லை என்றாலும் தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் கொரோனா பரவலால் பெரிதளவு நீலகிரி மாவட்டம் பாதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அந்த பகுதி சீல் வைக்கப்படுகிறது. கொரோனா தொற்றுள்ள, 9 பேர் கோவை இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 232 பேர் வீட்டு கண்காணிப்பிலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த, 800 பேர் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெயிடங்களுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது மக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வு மேற் கொள்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகன தொடங்கப்பட்டது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இது குறித்து சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்:- பொதுமக்களுக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்வது, மூலம் நோய் தொற்று அபாயத்தை கண்டறிந்து தடுக்க முடியும் என்றார்.






