என் மலர்
செய்திகள்

தமிழ்புத்தாண்டு- நாராயணசாமி வாழ்த்து
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கும் இனிய தருணம் இது. பழைய ஆண்டிற்கு விடைகொடுத்து புதிய சார்வரி ஆண்டினை வரவேற்க நாம் தயாராக உள்ளோம். கடந்த ஆண்டின் துயரங்களும் நம்மைவிட்டு விடைபெறும் ஆண்டாக இந்த புத்தாண்டு இருக்கும் என நம்புகிறேன். மிகுந்த துயரத்திற்கிடையே பிறக்கும் இந்த புத்தாண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றி துயர்வெல்லும் ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கொரோனாவின் கோர பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு நம் மீண்டும் திரும்புவோம் எனும் நம்பிக்கை விதையினை இந்த புத்தாண்டு விதைக்கிறது. இந்த விதை விருட்சமாக வளர்ந்து புதுச்சேரி புத்தொளி வீசட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் மாற்றங்கள் மலரட்டும். ஏற்றங்கள் உதிக்கட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பிறக்கட்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






