என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
வேலூரில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்
வேலூரில் கொரோனா பாதித்தவரின் வீட்டின் அருகில் இருந்த பெண் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூரில் முதன்முதலாக காட்பாடி பர்னீஸ் புரத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. லண்டனில் இருந்து திரும்பிய அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 26 பேர் உறவினர்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் வேலூர், கஸ்பா, சின்ன அல்லாபுரம், கருகம்பத்தூர், ஆர்.என். பாளையம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா இருந்தது.
இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 4 பேரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் என 60 பேர் கண்காணிக்கப்பட்டனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்.என். பாளையத்தை சேர்ந்த ஒருவரின் மாமனார், மாமியார், மனைவி மற்றும் 7 வயது மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வேலூர் காந்தி ரோட்டில் டீக்கடை வைத்திருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி முழுவதும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆர்.என்.பாளையம் பகுதியில் ஆய்வு செய்தபோது ஏற்கனவே ஒரே குடும்பத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அருகே உள்ள 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனாஅறிகுறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இளம்பெண் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றதால் கொரோனா பரவியதா? என ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூரில் முதன்முதலாக காட்பாடி பர்னீஸ் புரத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. லண்டனில் இருந்து திரும்பிய அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 26 பேர் உறவினர்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் வேலூர், கஸ்பா, சின்ன அல்லாபுரம், கருகம்பத்தூர், ஆர்.என். பாளையம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா இருந்தது.
இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 4 பேரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள் என 60 பேர் கண்காணிக்கப்பட்டனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்.என். பாளையத்தை சேர்ந்த ஒருவரின் மாமனார், மாமியார், மனைவி மற்றும் 7 வயது மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வேலூர் காந்தி ரோட்டில் டீக்கடை வைத்திருந்த சைதாப்பேட்டையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி முழுவதும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆர்.என்.பாளையம் பகுதியில் ஆய்வு செய்தபோது ஏற்கனவே ஒரே குடும்பத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டின் அருகே உள்ள 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனாஅறிகுறி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இளம்பெண் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றதால் கொரோனா பரவியதா? என ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






