என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

    நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக நாகை மாவட்டம் மாறி வருகிறது. நாகை மாவட்டத்தில் இதுவரை 3,383 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    கடந்த 9-ந் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த 12 பேரும் நாகை, நாகூர், பொரவச்சேரி, திருக்களாச் சேரி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்கள் வசித்து வந்த பகுதிகளுக்கு வெளி ஆட்கள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது உள்ளிட்ட சுகாதார பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ஆனாலும் நாகையை கொரோனா எனும் அபாயம் தொடர்ந்து துரத்தி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் 9 பேர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் நாகூரை சேர்ந்தவர்கள். இவர்களை ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணித்த வந்தனர்.

    அவர்களுடைய ரத்த மாதிரி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

    பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதால் நாகை மாவட்ட பகுதி அபாயகரமான சிறப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×