என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி விற்பனை
    X
    காய்கறி விற்பனை

    அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது - தாசில்தார் எச்சரிக்கை

    மஞ்சூர் பகுதியில் விதிகளை மீறி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது குந்தா தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டபின் மதியம் 1 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை கிராமபுறங்களுக்கு கொண்டு சென்று காய்கறிகள் விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மேலும் கடைகளை விட வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் கிலோவிற்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குந்தா தாசில்தார் சரவணன் விடுத்துள்ள எச்சரிக்கையில் குந்தா பகுதியில் ஊரடங்கை முன்னிட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும்.

    அதன் பின்னர் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. ஊரடங்கு உத்தரவை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக பொருட்களை விற்பனை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×