என் மலர்
செய்திகள்

மளிகை கடைகளுக்கு சீல்
சமூக இடைவெளி கடைபிடிக்காத மளிகை கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
நாளை முதல் 2 நாட்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காத மளிகை கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுவதை தவிர்க்க ஞாயிறு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே மளிகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு பிறகு நாளை முதல் 2 நாட்கள் மளிகைக் கடைகள் திறந்திருக்கும். இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மளிகை கடை வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வசதியாக வட்டம் வரைய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீங்கிய பிறகும் இந்த கடைகளை திறக்க சில மாதங்களாகும். எனவே வியாபாரிகள் இதில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடுவதை தவிர்க்க ஞாயிறு, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே மளிகைக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு பிறகு நாளை முதல் 2 நாட்கள் மளிகைக் கடைகள் திறந்திருக்கும். இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மளிகை கடை வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வசதியாக வட்டம் வரைய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 200 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீங்கிய பிறகும் இந்த கடைகளை திறக்க சில மாதங்களாகும். எனவே வியாபாரிகள் இதில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






