search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புதுவையில் கடலில் மூழ்கி தொழிலாளி தற்கொலை

    புதுவையில் கடலில் மூழ்கி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை ஒதியம்பட்டை சேர்ந்தவர் டெல்லிகணேஷ் (வயது23). இவர் புதுவை கடற்கரை சாலையில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் பணியில் இருந்த போது 40 வயது மதிக்கத்தக்க குப்பை பொறுக்கும் தொழிலாளி ஒருவர் தான் கொண்டு வந்த சாக்குமூட்டையை அங்குள்ள பாறாங்கல்லில் வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் மடமடவென கடலில் இறங்கினார்.

    இதனை பார்த்து விட்ட டெல்லிகணேஷ் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து கடலின் ஆழமான பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவர் மாயமானார்.

    இதுகுறித்து டெல்லி கணேஷ் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் கடலில் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலன் இல்லை. இந்த நபர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

    இதையடுத்து அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தலைமை செயலகம் எதிரே கடலில் குதித்து தற்கொலை செய்த தொழிலாளி பிணம் கரை ஒதுங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கரை ஒதுங்கிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அருகில் உள்ள மீனவர்களின் உதவியை நாடினர். ஆனால் மீனவர்கள் யாரும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.

    இதையடுத்து போலீசாரே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி யார்?-எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×