என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும்- அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள்
Byமாலை மலர்8 April 2020 10:22 AM GMT (Updated: 8 April 2020 10:22 AM GMT)
இஸ்லாமியர்களின் ஷபே பராத் நாளில் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்:
அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஷபே பராத் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். இந்த நாள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு (ஏப். 9, 10) நடுவில் வருகிறது.
இந்த இரவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள் வழக்கமாக மசூதிகளில் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். பெண்கள் வீட்டிலேயே படிப்பது வழக்கம். இது முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் அனைத்து மத வழிப்பட்டுத்தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்களது 5 வேளை தொழுகையை வீட்டுக்கு உள்ளேயே நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்.
அனைவருக்கும் ஷபே பராத் தொழுகையை மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது. பாதிப்பு ஏற்பட்ட நபரின் மூலமாக மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிலோபர் கபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஷபே பராத் முஸ்லிம்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். இந்த நாள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு (ஏப். 9, 10) நடுவில் வருகிறது.
இந்த இரவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள் வழக்கமாக மசூதிகளில் கூடி தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். பெண்கள் வீட்டிலேயே படிப்பது வழக்கம். இது முக்கியமான தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் அனைத்து மத வழிப்பட்டுத்தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்களது 5 வேளை தொழுகையை வீட்டுக்கு உள்ளேயே நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்.
அனைவருக்கும் ஷபே பராத் தொழுகையை மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது. பாதிப்பு ஏற்பட்ட நபரின் மூலமாக மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X