என் மலர்
செய்திகள்

கொலை
வேலூர் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை
வேலூர் அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது26). பெயிண்டர்.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ். ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று வேலூர் அருகே உள்ள அரியூர் அருகே கள்ளச்சாராயம் குடிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்திக்க சென்றனர். அந்த நபருக்கும், அசோக் தரப்புக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறுக்கு பின்னர் அந்த நபர் தனது தரப்பை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது அசோக் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் அசோக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அசோகக் சுருண்டு விழுந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஊரடங்கு காரணமாக அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் படுகாயத்துடன் சுய நினைவை இழந்து கிடந்த அவரை ஜெயப்பிரகாஷ் மற்றும் காமேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அசோக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அசோக்கை தாக்கிய கும்பல் அரியூர் பகுதியை சேர்ந்த 4 பேர் என்பதும் அவர்கள் ரவுடிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரவுடி கும்பலை பிடித்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது26). பெயிண்டர்.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ். ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று வேலூர் அருகே உள்ள அரியூர் அருகே கள்ளச்சாராயம் குடிக்க சென்றனர்.
பின்னர் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்திக்க சென்றனர். அந்த நபருக்கும், அசோக் தரப்புக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறுக்கு பின்னர் அந்த நபர் தனது தரப்பை சேர்ந்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது அசோக் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த தரப்பினர் அசோக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அசோகக் சுருண்டு விழுந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஊரடங்கு காரணமாக அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் படுகாயத்துடன் சுய நினைவை இழந்து கிடந்த அவரை ஜெயப்பிரகாஷ் மற்றும் காமேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அசோக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அசோக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அசோக்கை தாக்கிய கும்பல் அரியூர் பகுதியை சேர்ந்த 4 பேர் என்பதும் அவர்கள் ரவுடிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரவுடி கும்பலை பிடித்த பின்னரே கொலைக்கான முழு காரணமும் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story






