என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்6 April 2020 10:42 AM GMT (Updated: 6 April 2020 10:48 AM GMT)
நல்லவாடு கிராமத்தில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். மீன்பிடி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் குணசெல்வன் (வயது18). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவால் புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் குணசெல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.
பின்னர் வீடு திரும்பிய போது அவரது பெற்றோர் குணசெல்வனை கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்த குணசெல்வன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டின் பின்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினான்.
இதனையறிந்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து தூக்கிலிருந்து அவனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குணசெல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். மீன்பிடி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் குணசெல்வன் (வயது18). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவால் புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் குணசெல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.
பின்னர் வீடு திரும்பிய போது அவரது பெற்றோர் குணசெல்வனை கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்த குணசெல்வன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டின் பின்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினான்.
இதனையறிந்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து தூக்கிலிருந்து அவனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குணசெல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X