என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணரப்பேட்டையில் போலி மதுபாட்டில்கள் விற்ற பெயிண்டர் கைது
Byமாலை மலர்2 April 2020 7:48 AM GMT (Updated: 2 April 2020 7:48 AM GMT)
வாணரப்பேட்டையில் போலி மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு வாணரப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது27) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 32 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.2,150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது ஒதியஞ்சாலை போலீசர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு வாணரப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது27) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 32 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.2,150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது ஒதியஞ்சாலை போலீசர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X