search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்ட அலுவலகம்
    X
    சிவகங்கை மாவட்ட அலுவலகம்

    பிற மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டரிடம் அனுமதி பெறலாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    பிற மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டரிடம் அனுமதி பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சிவகங்கை,

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்களின் நலன்கருதி சிவகங்கை மாவட்டத்திற்குள் மருத்துவம், இறப்பு மற்றும் முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக அவசர பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் பிறமாவட்டங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக அவசர பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுச்செல்லாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×