என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமானூர் அருகே தாய்-சேய் நல வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்30 March 2020 8:38 AM GMT (Updated: 30 March 2020 8:38 AM GMT)
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தாய்-சேய் நல வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மகன் சூர்யகுமார் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பத்மநாபன் (27). நண்பர்களான சூர்ய குமாரும், பத்மநாபனும் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் பஞ்சரானது.
இதனால் சூர்யகுமாரும், பத்மநாபனும் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு டயரை கழற்ற தொடங்கினர். அப்போது எதிரே வேகமாக வந்த தாய்-சேய் நல வாகனம் அவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி வயல்வெளிக்குள் இறங்கி கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தாய்-சேய் நல வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் வெற்றியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மகன் சூர்யகுமார் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பத்மநாபன் (27). நண்பர்களான சூர்ய குமாரும், பத்மநாபனும் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் பஞ்சரானது.
இதனால் சூர்யகுமாரும், பத்மநாபனும் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு டயரை கழற்ற தொடங்கினர். அப்போது எதிரே வேகமாக வந்த தாய்-சேய் நல வாகனம் அவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி வயல்வெளிக்குள் இறங்கி கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தாய்-சேய் நல வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் வெற்றியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X