search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தடையை மீறி வாகனத்தில் வந்த 118 பேர் கைது- கடலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறியதாக கடலூர் மாவட்டத்தில் 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கொரானோ வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விதித்து வந்தது. ஆனால் இதனையும் மீறி கடலூர் மாவட்டத்தில் பலர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் போலீசார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகிறோம் என கூறிக்கொண்டு தேவையில்லாமல் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் வெளியில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தடையை மீறி வாகனத்தில் வரக்கூடிய பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த 80 பேர் மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பொதுமக்கள் தடையை மீறியும், தேவையில்லாமல் வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    நேற்றும் கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் அதிகளவில் இருசக்கர வாகனத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுற்றித் திரிந்தனர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன. மேலும் 144 தடை உத்தரவு எப்போது தளர்த்தப்படுகிறதோ அதன்பிறகு வாகனங்கள் வழங்கப்படும் என போலீசார் திட்டவட்டமாக கூறி அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×