search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலூர் ஜெயிலில் கைதி தூக்கிட்டு தற்கொலை

    வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதான கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் (வயது26). கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவரது அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தியாகராஜன் தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறை அதிகாரிகள் அவரின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×