search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேலூரில் ஆயுள் தண்டனை பெண் கைதி பலி

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை பெண் கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    வேலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி அஞ்சலை (வயது39). கொலை வழக்கு ஒன்றில் அஞ்சலைக்கு கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த 2005-ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்துவந்த அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இதற்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அஞ்சலைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×