என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் ஆயுள் தண்டனை பெண் கைதி பலி
Byமாலை மலர்23 March 2020 4:57 AM GMT (Updated: 23 March 2020 4:57 AM GMT)
வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை பெண் கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி அஞ்சலை (வயது39). கொலை வழக்கு ஒன்றில் அஞ்சலைக்கு கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்துவந்த அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இதற்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அஞ்சலைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி அஞ்சலை (வயது39). கொலை வழக்கு ஒன்றில் அஞ்சலைக்கு கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்துவந்த அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இதற்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அஞ்சலைக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X