என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே தேர்வில் தோல்வி பயத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்21 March 2020 10:41 AM GMT (Updated: 21 March 2020 10:41 AM GMT)
வில்லியனூர் அருகே தேர்வில் தோல்வி பயத்தில் பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஹரிபிரியா (வயது 16).
இவர், ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஹரிபிரியா தேர்வை சரியாக எழுதவில்லை என்று தனது தந்தை ஞானமூர்த்தியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
அதற்கு ஞானமூர்த்தி பரவாயில்லை. பின்னர் படித்து தேர்வு எழுதலாம் என்று சமாதானம் செய்து வந்தார். ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத ஹரி பிரியா தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் சம்பவத்தன்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த ஹரிபிரியாவை அவரது பெற்றோர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை ஹரிபிரியா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஹரிபிரியா (வயது 16).
இவர், ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஹரிபிரியா தேர்வை சரியாக எழுதவில்லை என்று தனது தந்தை ஞானமூர்த்தியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
அதற்கு ஞானமூர்த்தி பரவாயில்லை. பின்னர் படித்து தேர்வு எழுதலாம் என்று சமாதானம் செய்து வந்தார். ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத ஹரி பிரியா தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் சம்பவத்தன்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த ஹரிபிரியாவை அவரது பெற்றோர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை ஹரிபிரியா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X