search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோத்தகிரியில் காட்டெருமை தாக்கி பெண் பலி

    கோத்தகிரியில் காட்டெருமை தாக்கியதில் பெண் பலியான சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி ஜக்கனாரை கீழ்க்கேரியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பார்வதி (வயது 65).100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று விடுமுறை எடுத்த பார்வதி தனது தேயிலை தோட்டத்துக்கு சென்றார். அங்கு வேலை பார்த்த அவர் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தபோது அங்குள்ள புதரில் இருந்த காட்டெருமை பார்வதியின் முதுகில் கொம்புகளால் குத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவல் அறிந்ததும் கோத்தகிரி வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், வீரமணி ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வனவிலங்கு தாக்கி பலியாகும் நபரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட உதவி வன அலுவலர் சரவண குமார், வனச்சரகர் செல்வகுமார் ஆகியோர் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். மீதம் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினர்.

    வன அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டனர்.

    தற்போது வனவிலங்கு கணக்கெடுப்பு நடக்கிறது. குடியிருப்பு அருகே சுற்றும் வனவிலங்களை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அதிகாரிகள் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
    Next Story
    ×