என் மலர்
செய்திகள்

தற்கொலை முயற்சி
காலாப்பட்டு ஜெயிலில் கைதி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு பரோல் ரத்து செய்யப்பட்டதால் காலாப்பட்டு ஜெயிலில் கைதி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேதராப்பட்டு:
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). தனியார் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவரை ஏமாற்றி விழுப்புரத்தில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமரனுக்கு அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக முத்துக்குமரன் ஒரு வாரம் பரோலில் செல்ல விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முத்துக்குமரன் பதுக்கி வைத்து இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்துக்குமரனுக்கு திருமணத்துக்காக வழங்கப்பட இருந்த பரோல் ரத்து செய்யப்பட்டது.
பரோல் ரத்து செய்யப்பட்டதால் முத்துக்குமரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் ஜெயிலில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை ஜெயில் வார்டன்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயிலில் கைதி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). தனியார் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவரை ஏமாற்றி விழுப்புரத்தில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முத்துக்குமரனுக்கு அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக முத்துக்குமரன் ஒரு வாரம் பரோலில் செல்ல விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது முத்துக்குமரன் பதுக்கி வைத்து இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்துக்குமரனுக்கு திருமணத்துக்காக வழங்கப்பட இருந்த பரோல் ரத்து செய்யப்பட்டது.
பரோல் ரத்து செய்யப்பட்டதால் முத்துக்குமரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் ஜெயிலில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார்.
இதில் மயங்கி விழுந்த அவரை ஜெயில் வார்டன்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயிலில் கைதி பினாயிலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
Next Story






