search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 11 திருநங்கைகள் கைது

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
    Next Story
    ×