search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    முதலியார்பேட்டையில் ஓய்வுபெற்ற ஏ.எப்.டி. தொழிலாளி தற்கொலை

    முதலியார் பேட்டையில் அளவுக்கு அதிகமாக மாத்திரையை தின்று ஓய்வு பெற்ற ரோடியர் மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை பழைய மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 78). ஓய்வுபெற்ற ரோடியர் மில் தொழிலாளி.

    கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நோய் குணமாகவில்லை. இதனால் பெருமாள் விரக்தியுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த பெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து தின்றார்.

    இதில், மயங்கி கிடந்த பெருமாளை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×