என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஏரியில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலி

    செங்கல்பட்டு அருகே துணி துவைப்பதற்காக சென்ற சிறுமிகள் உள்பட 3 பேர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்தகளத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் வைகுந்த நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (27). இவர் இன்று காலை துணி துவைப்பதற்காக மகள் சுபாசினி (10), உறவினர் மகளான தேவதர்சினி ஆகியோருடன் ஏரிக்கு சென்றார்.

    நீண்ட நேரமாக துணி துவைக்க சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அங்கு துணிதுவைக்க எடுத்த சென்ற துணிகள் அப்படியே இருந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடிப்பார்த்த போது 3 பேரும் ஏரியில் மூழ்கி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
    Next Story
    ×