என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர் விபத்தில் பலி
Byமாலை மலர்2 March 2020 10:31 AM GMT (Updated: 2 March 2020 10:31 AM GMT)
சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊட்டி:
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏ.சி., மெக்கானிக் மதுசூதனன், (21) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
பின்னர் மீண்டும் சென்னை செல்ல நேற்று மாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே வந்தபோது அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது எதிரே கார் வந்ததால், நிலைதடுமாறி சறுக்கி சாலையில் விழுந்தனர். இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்த போதும், விஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மதுசூதனன், குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X