என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்தை கண்டித்து 6-வது நாளாக முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு
Byமாலை மலர்26 Feb 2020 11:04 AM GMT (Updated: 26 Feb 2020 11:04 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் 6-வது நாளாக நீடிக்கிறது.
ஈரோடு:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியிருப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். நாளுக்கு நாள் இவர்களின் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாள் முழுவதும் முஸ்லிம்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு உள்ளனர். இரவில் ஆண்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டக்களத்திற்கு நேரடியாக வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியிருப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். நாளுக்கு நாள் இவர்களின் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாள் முழுவதும் முஸ்லிம்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு உள்ளனர். இரவில் ஆண்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டக்களத்திற்கு நேரடியாக வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X