search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேலூர் வள்ளலாரில் பைக் மோதி வேளாண் அலுவலக ஊழியர் பலி

    வேலூர் வள்ளலாரில் இன்று காலை பைக் மோதியதில் வேளாண்மை அலுவலக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது43). தொரப்பாடியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை ருத்ரமூர்த்தி அவருடைய மனைவியை பஸ் ஏற்றி விட்டு வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற பைக் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ருத்ரமூர்த்தியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×