என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில், கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்22 Feb 2020 4:37 PM GMT (Updated: 22 Feb 2020 4:37 PM GMT)
ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி நகரில் கடந்த மாதம் 20-ந் தேதி ஒருவர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். போலீசார் சிவக்குமாரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தோடும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் உத்தரவையடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி நகரில் கடந்த மாதம் 20-ந் தேதி ஒருவர் கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். போலீசார் சிவக்குமாரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தோடும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் உத்தரவையடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்த சிவக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X