என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொல்லம்பாளையத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் வரா கவுண்டன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொன்னம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்கினர்.
அதிகாலை 2 மணியளவில் திடீரென எழுந்த பொன்னம்மாள் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டிலிருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவரும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பொன்னம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்னம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்