search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து தற்கொலை
    X
    தீக்குளித்து தற்கொலை

    கொல்லம்பாளையத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

    கொல்லம்பாளையத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மூதாட்டி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் வரா கவுண்டன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

    அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்கினர்.

    அதிகாலை 2 மணியளவில் திடீரென எழுந்த பொன்னம்மாள் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டிலிருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவரும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பொன்னம்மாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பொன்னம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×