என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே பெண்ணிடம் தகராறு- ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்17 Feb 2020 10:25 AM GMT (Updated: 17 Feb 2020 10:25 AM GMT)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 44).
இவர் தனது மகன் சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த நந்தினி (25) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் விஜயமங்கலம் செட்டிவீதி, பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35). ஆட்டோ டிரைவர். இவர் மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்தார். மஞ்சுளாவிடம் நான் திருமணம் செய்து கொள்ள நினைத்த நந்தினியை நீ எப்படி உனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்? என கேட்டு தகராறு செய்தாராம்.
அப்போது அய்யப்பன் நந்தினியை கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தார். அப்போது அய்யப்பனை மஞ்சுளா தடுத்தார். அதற்கு அய்யப்பன் மஞ்சுளாவை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த கட்டையை எடுத்து அடிக்க முயன்றாராம்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கிருந்து அய்யப்பன் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தார்.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அய்யப்பனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மேக்கூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 44).
இவர் தனது மகன் சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த நந்தினி (25) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் விஜயமங்கலம் செட்டிவீதி, பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35). ஆட்டோ டிரைவர். இவர் மஞ்சுளாவின் வீட்டிற்கு வந்தார். மஞ்சுளாவிடம் நான் திருமணம் செய்து கொள்ள நினைத்த நந்தினியை நீ எப்படி உனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம்? என கேட்டு தகராறு செய்தாராம்.
அப்போது அய்யப்பன் நந்தினியை கையை பிடித்து இழுக்க முயற்சி செய்தார். அப்போது அய்யப்பனை மஞ்சுளா தடுத்தார். அதற்கு அய்யப்பன் மஞ்சுளாவை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த கட்டையை எடுத்து அடிக்க முயன்றாராம்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கிருந்து அய்யப்பன் தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தார்.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அய்யப்பனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X