search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கதிரவன் வெளியிட்டார்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 23.12.2019 முதல் 22.01.2020 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6, தேர்தல் படிவம் 7 (நீக்கல்) படிவம் 8 ( திருத்தம்) மற்றும் படிவம் 8 ஏ (இடமாற்றம்) ஆகிய படிவங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி ஈரோடு மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேரும், மற்றவர்கள் 94 பேரும் அடங்குவார்கள்.

    சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தி புதிதாக 42 ஆயிரத்து 920 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6601 பேர் பல்வேறு காரணங்களால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியல் நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 875 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 12 என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 11 பேர் உள்ளனர்.

    மேற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 580 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 265 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 28 என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 873 பேரும்,

    மொடக்குறிச்சியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 150 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 17 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 19 என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 186 பேரும்,

    பெருந்துறை தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 204 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 922 பெண் வாக்காளர்களும், மற்றவர் நாலு பேரும் என மொத்தம் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 130 பேரும்,

    பவானி தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 143 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 99 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 7 பேர் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 249 பேரும் ,

    அந்தியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 449 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 117 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள்1 1 பேர் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 577 பேரும்,

    கோபி தொகுதியில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 99 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 609 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 716 பேரும்,

    பவானிசாகர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 5 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 926 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர் உள்ளனர்.
    Next Story
    ×