என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    5-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை

    நாவலூர் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அப்பாத்துரை. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகள் ஊர்மிளா (23). சாட்வேர் என்ஜினீயர்.

    நாவலூரில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ஊர்மிளாவுக்கு வேலை கிடைத்தது. சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்து அவர் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மதியம் ஊர்மிளா அவரது கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு போன் வந்தது. அதில் வந்த தகவலை கேட்டு பதட்டம் அடைந்தார்.

    இருக்கையில் இருந்து எழுந்த ஊர்மிளா கம்பெனியின் 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.

    படுகாயம் அடைந்த ஊர்மிளா, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பெண் என்ஜினீயர் ஊர்மிளா உடலை செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் ஊர்மிளாவுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை பிடிக்கவில்லையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×