search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    போரூர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

    போரூர் சிவன் கோவில் உண்டியலை உடைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    போரூர் சிவன் கோயில் தெருவில் ராமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் பூஜை முடிந்து வழக்கம் போல ஊழியர்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் மதில் சுவர் ஏறி உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    போரூர் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×