என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
Byமாலை மலர்9 Feb 2020 6:18 PM GMT (Updated: 9 Feb 2020 6:18 PM GMT)
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசுகையில், புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, இலுப்பூர், விராலிமலை, குளத்தூர் போன்ற பல்வேறு தாலுகாவில் உள்ள கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் 70 ஆயிரத்து 771 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன், 352 ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாமல் துல்லியமான ஒளிபரப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசுகையில், புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, இலுப்பூர், விராலிமலை, குளத்தூர் போன்ற பல்வேறு தாலுகாவில் உள்ள கேபிள் டி.வி. சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் 70 ஆயிரத்து 771 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதுடன், 352 ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாமல் துல்லியமான ஒளிபரப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்றார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X