search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    ஜோலார்பேட்டை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    ஜோலார்பேட்டை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பிரபாகரன் (வயது21). கட்டிட மேஸ்திரி. இவர் 2 நாட்களுக்கு முன் அச்சமங்கலம் நோக்கி பைக்கில் சென்றார்.

    அப்போது அங்குள்ள அம்மன் கோவில் அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து  எதிர்பாராத விதமாக பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் இறந்தார். ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×