என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்29 Jan 2020 5:57 PM GMT (Updated: 29 Jan 2020 5:57 PM GMT)
ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சரவணபவன் வரவேற்றார். போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், கே.ஆர்.டி., டி.வி.எஸ். உரிமையாளர் ராஜன், அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், ரமேஷ் ஜுவல்லரி உரிமையாளர் பிஜி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கி, அண்ணாசிலை, கடைவீதி, 4 ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். பின்னர் பஸ்நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை பற்றிய உயிர்காக்கும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் வீட்டில் தீப்பிடித்தால் அவற்றை எப்படி அணைப்பது, சிலிண்டரில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முறைகளை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் லயன்ஸ் சங்க தலைவர் பாண்டியன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் செய்திருந்தனர். முடிவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கண்ணன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சரவணபவன் வரவேற்றார். போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், கே.ஆர்.டி., டி.வி.எஸ். உரிமையாளர் ராஜன், அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், ரமேஷ் ஜுவல்லரி உரிமையாளர் பிஜி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கி, அண்ணாசிலை, கடைவீதி, 4 ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். பின்னர் பஸ்நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை பற்றிய உயிர்காக்கும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் வீட்டில் தீப்பிடித்தால் அவற்றை எப்படி அணைப்பது, சிலிண்டரில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முறைகளை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் லயன்ஸ் சங்க தலைவர் பாண்டியன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் செய்திருந்தனர். முடிவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X