search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான சிறுத்தைப்பூனை
    X
    பலியான சிறுத்தைப்பூனை

    கோத்தகிரியில் வாகனம் மோதி சிறுத்தைப்பூனை பலி

    கோத்தகிரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்தது.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இருந்து மி‌‌ஷன் காம்பவுண்டு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிறுத்தைப்பூனை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு, சிறுத்தைப்பூனையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அதே பகுதியில் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது 1 வயதுடைய பெண் சிறுத்தைப்பூனை ஆகும். வனவிலங்குகள் சாலையை கடப்பதால், இரவில் டிரைவர்கள் கவனமுடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என்றனர்.
    Next Story
    ×