search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    வேலூர் அரசு பள்ளி அருகே குட்கா விற்பனை- கலெக்டர் அலுவலகத்தில் புகார்

    வேலூர் அரசு பள்ளி அருகே குட்கா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக சைதாப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அதில் அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்படும். குட்கா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    Next Story
    ×