என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரணாம்பட்டு அருகே பைக் விபத்தில் 2 பெண்கள் பலி- வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்4 Jan 2020 10:44 AM GMT (Updated: 4 Jan 2020 10:44 AM GMT)
பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் டி.டி.மோட்டூர் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு புறப்பட இருந்தார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசனின் உறவினர் வினோத் (வயது 30) என்பவர் முருகேசனின் மகள் சந்தியா (18) மற்றும் அவரது மைத்துனி ஆம்பூர் தாலுகா பள்ளிக்குப்பம் அருகே உள்ள பூமலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தி (19) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு எர்த்தாங்கல் கிராமத்தை நோக்கி சென்றார்.
பேரணாம்பட்டு- குடியாத்தம் சாலையில் ஊசூரான்பட்டி கிராமம் அருகில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை வினோத் முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத் ஆனந்தி, சந்தியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆனந்தி, சந்தியா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் டி.டி.மோட்டூர் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு புறப்பட இருந்தார்.
இதனால் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசனின் உறவினர் வினோத் (வயது 30) என்பவர் முருகேசனின் மகள் சந்தியா (18) மற்றும் அவரது மைத்துனி ஆம்பூர் தாலுகா பள்ளிக்குப்பம் அருகே உள்ள பூமலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தி (19) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு எர்த்தாங்கல் கிராமத்தை நோக்கி சென்றார்.
பேரணாம்பட்டு- குடியாத்தம் சாலையில் ஊசூரான்பட்டி கிராமம் அருகில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை வினோத் முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத் ஆனந்தி, சந்தியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆனந்தி, சந்தியா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X