search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    உள்ளாட்சி தேர்தலில் திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி பெற்றுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சன்னாசி நல்லூர் (1-வது வார்டு) ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவனின் மனைவி செல்வி போட்டியிட்டார். அவருக்கு குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

    சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர் ஆகிய கிராம ஊராட்சிகளை கொண்ட இந்த ஒன்றியக்குழுவில் 2,446 வாக்குகள் பெற்று செல்வி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பெ.செல்வி 1,084 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 
    Next Story
    ×