search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோடு மாவட்டத்தில் ஆபாச படம் பார்ப்போர்களை கண்காணிக்கும் போலீசார்

    ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகள் ஆபாச படத்தை யாராவது பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பது பார்ப்பது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
    சூரம்பட்டி:

    பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

    ஆனால் இந்த கொடூர செயல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதைத்தடுக்க இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இண்டர்நெட்டிலும் மொபைல் போன்களிலும் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது சேமித்து வைப்பது மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற சம்பவங்கள் தடை செய்யப்படுள்ளது இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி ஒரு சிலர் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வது பார்ப்பது மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள் .

    இந்த செயல்களில் ஈடுபட்ட 30 பேர் போலீசாரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் யார் எந்த இடத்தில் உள்ளனர் என்றும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகள் ஆபாச படத்தை யாராவது பதி விறக்கம் செய்து சேமித்து வைப்பது பார்ப்பது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது-

    குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பது பதிவிறக்கம் செய்வது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள 30 பேரின் தகவல்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இதுபோல ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் நடவடிக்கை ரகசியமாக அதே நேரத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×