என் மலர்
செய்திகள்

ஆற்காடு அருகே செல்போன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த காவனூர் பாரதி நகரை சேர்ந்தவர் யோகானந்தன் (வயது 28). காவனூரில் செல்போன் கடை நடத்தி வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர். மாலதி காவனூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வங்கி சார்பில் சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு மாலதி சென்று விட்டார். நேற்றிரவு கடையில் இருந்து வீட்டிற்கு வந்த யோகனந்தன் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியேவரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு யோகனந்தன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யோகனந்தன் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






