search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

    ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வராணி(வயது 35). இவர் தனது வீட்டில் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்தார். அப்போது அருகில் வசிக்கும் பேபி என்பவர், செல்வராணியிடம் உனது செல்போனை காணவில்லை என்று கூறினாயே, கண்டுபிடித்து விட்டாயா? என்று கேட்டதாகவும், அதற்கு செல்வராணி உனது மகன் மணிகண்டன்தான்(22) எடுத்து மறைத்து வைத்திருப்பான் என்று கூறியதாகவும் தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், செல்வராணியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வராணி, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×