search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னிமலை பகுதியில் பில்லி சூனியகாரர்களால் பொதுமக்கள் அச்சம்

    சென்னிமலை பகுதியில் தனியார் பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில் பில்லி சூனிய வாதிகளால் கொட்டப்படும் மாந்தீரிக பொருட்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து பெருந்துறை ரயில்வே ஸ்டேசன் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வெங்கிட்டியம்பாளையம் செல்லும் பிரிவில் (மூன்று ரோடு பகுதி) பில்லி சூனிய மாந்தீரிக வாதிகளால் பல்வேறு பூஜை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர்.

    இதில் தேங்காய், பூசணிகாய், சிறிய பானை, நவதானியம், பிஸ்கட், இரண்டு எலுமிச்சை பழம் இதில் முழுவதும் குண்டூசி குத்தி போட்டுள்ளனர்.

    இந்த பொருட்களை பார்த்து மக்கள் பீதியடைந்து செல்கின்றனர். மேலும் அருகில் தனியார் பள்ளி மற்றும் கம்பெனி வேறு உள்ளது. இங்கு அதிகபடியான பெண்கள் பணியாற்றுகிறார்கள் இவர்களும் இந்த மந்தீரிக பொருட்களை பார்த்து பீதியுடன் பணிக்கு செல்கின்றனர்.

    மேலும் இரவு பகல் என எந்த நேரமும் மக்கள் வந்து செல்லும் ரோடு இப்படி மெயின் ரோட்டில் கொட்டுவது பெண்கள், குழந்தைகளை பயத்தை ஏற்படுத்துகிறது. இப்படி மந்திரத்தை நம்பும் பில்லி சூனிய வாதிகள் இனி மேலாவது இப்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் கொட்டி பொதுமக்களுக்கு பீதி உள்ளாக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×