என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாம்பரம்-காஞ்சிபுரத்துக்கு ஏ.சி. சொகுசு பஸ்
Byமாலை மலர்27 Nov 2019 7:19 AM GMT (Updated: 27 Nov 2019 7:19 AM GMT)
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. சொகுசு பஸ் (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ் பயணம் என்பது பயணிகளுக்கு மிகவும் சவாலானதாகவே உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படாதபாடுபட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. சொகுசு பஸ் (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இந்த பஸ் ஒரகடம் வழியாக செல்கிறது.
இந்த சொகுசு பஸ் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ.30, அதிகபட்சமாக ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ் இயக்கப்படுவதால் அதிக நெரிசல் இல்லாமல் பயணிகள் செல்கிறார்கள்.
மேலும் இந்த பஸ் பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், வாரணவாசி, வாலாஜாபாத் ஆகிய 5 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது. இதனால் பயணம் செய்யும் நேரமும் அதிக அளவு குறைந்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு ஒரகடம் வழியாக இயக்கப்படும் ஏ.சி. பஸ்சுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இரு மார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 நிறுத்தங்களில் மட்டும் இந்த பஸ் நின்று செல்லும்” என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ் பயணம் என்பது பயணிகளுக்கு மிகவும் சவாலானதாகவே உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படாதபாடுபட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. சொகுசு பஸ் (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இந்த பஸ் ஒரகடம் வழியாக செல்கிறது.
இந்த சொகுசு பஸ் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ.30, அதிகபட்சமாக ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ் இயக்கப்படுவதால் அதிக நெரிசல் இல்லாமல் பயணிகள் செல்கிறார்கள்.
மேலும் இந்த பஸ் பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், வாரணவாசி, வாலாஜாபாத் ஆகிய 5 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது. இதனால் பயணம் செய்யும் நேரமும் அதிக அளவு குறைந்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு ஒரகடம் வழியாக இயக்கப்படும் ஏ.சி. பஸ்சுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இரு மார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 5 நிறுத்தங்களில் மட்டும் இந்த பஸ் நின்று செல்லும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X