search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை (கோப்புப்படம்)
    X
    மழை (கோப்புப்படம்)

    அரியலூரில் மிதமான மழை

    அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 34 மி.மீ. மழை பெய்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 34 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூரில் 12.5மி.மீ., செந்துறையில் 6மி.மீ., திருமானூரில் 5 மி.மீ., மழை பெய்துள்ளது.

    இந்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இரவு முழுவதும் பெய்த மழையால் அரியலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×