என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி மாரத்தான் ஓட்டம் - அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
Byமாலை மலர்21 Nov 2019 5:59 PM GMT (Updated: 21 Nov 2019 5:59 PM GMT)
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பங்கேற்றார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் நேற்று நடைபெற்றது. தா.பழூர் கடைவீதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தானில் தானும் கலந்து கொண்டு ஓடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடல்நலம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சமூக ஆர்வலர் தனஞ்ஜெயன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் போலீசார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் நேற்று நடைபெற்றது. தா.பழூர் கடைவீதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தானில் தானும் கலந்து கொண்டு ஓடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடல்நலம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சமூக ஆர்வலர் தனஞ்ஜெயன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் போலீசார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X