search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் உறுப்பு தானம்
    X
    உடல் உறுப்பு தானம்

    ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த போளூர் பர்னிச்சர் கடை உரிமையாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
    ஆரணி:

    போளூர் ஹவுசிங் போர்டு எதிரில் பர்னிச்சர்  கடையை நடத்தி வந்தவர். ஜெகன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் போளூரில் இருந்து ஆரணி ராட்டினமங்கலம் ரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் வந்தார். முள்ளிப்பட்டு சேவூர் பைபாஸ் சாலை அருகே  சென்ற போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட  அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் அங்கு ஜெகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் தாயார் கோதாவரி, சகோதரி பிரியா ஆகியோரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து மருத்துவக்குழுவினர் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உடனடியாக உடல் உறுப்பு தேவையானவர்களுக்கு பொருத்தினர்.

    Next Story
    ×