என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு
Byமாலை மலர்6 Nov 2019 10:55 AM GMT (Updated: 6 Nov 2019 10:55 AM GMT)
நீலகிரியில் பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டடுள்ளது.
ஊட்டி:
நீலகிரியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரியின் சுற்று சூழலை பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு குறித்து கள ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
அதன்படி, மாவட்டத்தில், 883 ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஊட்டி 40, குன்னூர் 10, கோத்தகிரி, 7, கூடலூர், 20 என, மொத்தம், 77 பயனற்று கிடக்கும் ஆழ் துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் நடந்த ஆய்வின் போது கண்டறியப்பட்ட பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்.
நீலகிரியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரியின் சுற்று சூழலை பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் பயனற்று கிடக்கும் ஆழ்துளை கிணறு குறித்து கள ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
அதன்படி, மாவட்டத்தில், 883 ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ஊட்டி 40, குன்னூர் 10, கோத்தகிரி, 7, கூடலூர், 20 என, மொத்தம், 77 பயனற்று கிடக்கும் ஆழ் துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவைகளை உடனடியாக மூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரியில் நடந்த ஆய்வின் போது கண்டறியப்பட்ட பயனற்று கிடக்கும் 77 ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி வேகமாக நடந்து வருகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X